வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும். குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஏரிகள், குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ₹25 ஆயிரம் வழங்கவேண்டும். கால்நடைகளை கணக்கீடு செய்து இழப்பீடு தொகையை அரசு வழங்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ20,000 நிவாரண உதவிதொகை: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.