கோயில்களில் இதுபோன்ற தாக்குதல் இனி வருங்காலங்களில் வராமல் பார்த்துக் கொள்ளவும், சட்டம்-ஒழுங்கை சீராக்குவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
சசிகலா அறிக்கை: ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம் அருகே காயத்திரி மண்டபத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்கு நீண்ட நேரம் நின்றதால் தற்காலிக பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. வெளி மாநில பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது. எனவே, ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களை தாக்கிய தற்காலிக பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதலுக்கு ஓபிஎஸ், சசிகலா கண்டனம் appeared first on Dinakaran.