ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் சந்திரபாபு நாயுடு தரிசனம்

ஸ்ரீபெரும்புதூர்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ளஸ்ரீ ராமானுஜர் கோயிலுக்கு வருகை வந்தார். அவருக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டடது.

பின்னர், கோயில் யானையான கோதைக்கு பேரிச்சம்பழம், ஆப்பிள் போன்றவற்றை வழங்கி ஆசீர்வாதம் பெற்றார். இதைத்தொடர்ந்து ராமானுஜர் சன்னதி, ஆதிகேசவ பெருமாள், தாயார் சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் செய்தார். அருளச்செயல் கோஷ்டியினருக்கு வஸ்திர தானம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் சந்திரபாபு நாயுடு தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: