இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து சாலை சீரமைக்கப்பட்டு, காலை 9 மணியளவில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மேட்டுபாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை கல்லார் பகுதிவழியாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வந்தார். மண் சரிவு காரணமாக செல்ல முடியாமல் அவர் சிக்கி தவித்தார். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை அமைச்சர் எல்.முருகன் குடை பிடித்தபடி பார்வையிட்டார். சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் சாலை சீரமைக்கப்பட்டதும் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
The post நீலகிரியில் திடீர் மண் சரிவு சிக்கி தவித்த ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.
