கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி காரைக்கால், நாகையைச் சேர்ந்த 25 மீனவர்கள் சிறைபிடிப்பு


காரைக்கால்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து வருவது வழக்கமாகும்.

அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து செல்கின்றனர். இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 25 மீனவர்களையும் கைது செய்தனர்.

The post கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி காரைக்கால், நாகையைச் சேர்ந்த 25 மீனவர்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: