சலூன் கடையில் திருட்டு

களக்காடு,டிச.9: ஏர்வாடி குழளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் வைகுண்ட சிவன் (18). இவர் ஏர்வாடி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் கடையை திறந்து வைத்து விட்டு, வீட்டிற்கு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, கடையில் இருந்து முடி வெட்ட பயன்படுத்தப்படும் மிஷின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பொத்தையடியை சேர்ந்த முருகன் (55), குமார் (42) ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post சலூன் கடையில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: