கூடூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

 

திருவாரூர், டிச. 9: திருவாரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தற்காப்பு பயிற்சி நடைபெற்றது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் கல்வித்துறையில் மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் உடல் ஆரோக்கியத்திற்காக விளையாட்டு, கலை மற்றும் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 6 முதல் 10 வகுப்பு வரையில் படிக்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இதைமுன்னிட்டு திருவாரூர் ஒன்றியம் கூடூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சிகள் தற்காப்பு கலை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் மூலம் வழங்கப்பட்டன. இதில் வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன், வள மைய மேற்பார்வையாளர் சாந்தி, ஆசிரிய பயிற்றுனர் கந்தப்பன், பள்ளி தலைமை ஆசிரியை திலகவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post கூடூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: