தற்போது தோணி கிராமத்துக்குள் மீண்டும் ஒரு காட்டு யானை புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளி, தென்னை, பாக்கு, வாழை மற்றும் ரப்பர் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானை ஊருக்குள் நடமாடும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்டி வருகின்றனர்.
The post பாலக்காடு அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்: கிராம மக்கள் பீதி appeared first on Dinakaran.