அதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செ.மீ. அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் நிலையில், பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22-ம் தேதி முதல் மலை ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. பாதை சரிசெய்யப்பட்டு இன்று முதல் மலை ரயில் சேவை தொடங்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து! appeared first on Dinakaran.
