அந்த வகையில், பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகளில் உள்ள 3 பெண் கைதிகள் உள்பட 27 பேரை தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி சிறைத்துறை நேற்று விடுதலை செய்துள்ளது.
குறிப்பாக, மத்திய புழல் சிறை-1ல் 3 பேர், வேலூர் மத்திய சிறையில் 7 பேர், கடலூர் மத்திய சிறையில் 2 பேர், சேலம் மத்திய சிறையில் 4 பேர், கோவை மத்திய சிறையில் 4 பேர், மதுரை மத்திய சிறையில் 2 பேர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 பேர், புழல் பெண்கள் சிறையில் 2 பேர், வேலூர் பெண்கள் சிறையில் ஒருவர் என மொத்தம் 27 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
The post 9 மத்திய சிறைகளில் இருந்து பெண் கைதிகள் உள்பட 27 பேர் விடுதலை: தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.