இதனை பூங்காவிற்கு வரும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். முதல் சீசனுக்காக டிசம்பர் மாதம் முதல் பூங்காவில் விதைப்பு மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். 5 மாதங்கள் கழித்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதற்காக, தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் சேகரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது நடவு பணிகள் துவக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா உட்பட பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் மலர் பாத்திகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
The post கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி பூங்காவில் மலர் பாத்திகள் தயார் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.