அங்கு விவசாயத்துறைக்கு தேவையான ஆலோசனைகள் கைலாசா நாடு சார்பில் வழங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்பின்னர் தான் கைலாசா பற்றிய உண்மை தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பராகுவே நாட்டின் விவசாயத்துறை மூத்த அதிகாரி அர்னால்டோ சாமோரோ, விவசாய அமைச்சரின் தலைமைப் பணியாளர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் தான் ஏமாந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் கைலாசா நாட்டின் பெயரில் வந்த போலி அதிகாரிகள் விவசாயத்துறை அமைச்சர் கார்லோஸ் கிமினெஸையும் சந்தித்ததாக சாமோரோ கூறினார்.
The post கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் பராகுவே அதிகாரி டிஸ்மிஸ் appeared first on Dinakaran.