இந்த மின்வேலியில் சிக்கி நேற்று அதிகாலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுதொடர்பாக விவசாயி புட்டன் மீது பர்கூர் வனத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தொழிலாளி பலி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம், பாண்டியார் தேயிலை கோட்டம், பால் மேடு சரக்கத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் பிரான்சிஸ் (56).
இவர், நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பணி முடித்து வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டி செல்லும் போது அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பிரான்சிஸ் மனைவி விமலா ஜூலியட்டிடம் வனத்துறை சார்பில் அளிக்கப்படும் உடனடி உதவித்தொகை ரூ.50,000 வழங்கப்பட்டது.
The post மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி: யானை தாக்கி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.
