தமிழ்நாடு அரசு இந்த மூத்த விளையாட்டு வீரரின் சாதனையை கண்டு பெருமை கொள்கிறது. இவரது வெற்றி வருங்காலங்களிலும் தொடரட்டும்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு வயது கொண்ட குழுக்கள் பங்கேற்கும். அதில் சுப்பிரமணியன் 86 முதல் 90 வயது கொண்ட விளையாட்டு வீரர் குழுவில் பங்கேற்று சாதனையை புரிந்துள்ளார். ஐ.சி.எப்.பின் முதுநிலை பகுதிப் பணியாளராக 1996ல் ஓய்வு பெற்ற இவர் ஐ.சி.எப்.பின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவரது மாணவர்கள் பலர் அகில இந்திய தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ளனர். சமீபத்தில் ஐ.சி.எப் பொதுமேலாளர் மல்லையாவை சந்தித்து வாழ்த்து பெற்ற அவரை, தடகளப் போட்டிகளில் பங்கேற்று வயது மாறுபாடின்றி வெல்ல விரும்புவோருக்கு ஒரு முன்மாதிரியாக சுப்பிரமணியம் விளங்குவதாக பாராட்டினார்.
The post சர்வதேச சாதனை புரிந்த ஐசிஎப் முன்னாள் விளையாட்டு வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.
