சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் சூதாட்ட விடுதி நடத்திய தந்தை, மகன் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்யா, அவரது மகன் சுதாகர், சூதாட்ட விடுதி பணியாளர்கள் 6 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 264 டோக்கன்கள், 25 டிரம்ப் கார்டு, விடுதியில் இருந்த தளவாட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.