நியோமேக்ஸ் நிறுவனத்தால் வசூலிக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதி, அதன் துணை நிறுவனங்களாக செயல்பட்ட பல நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவே, 88 துணை நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் ஏற்கனவே விசாரணைக்கு வந்தன. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி, ‘‘நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை அதன் துணை நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளனர். விசாரணை இன்னும் முடியாததால், இவர்களின் மனுவை ஏற்கக் கூடாது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
The post நியோமேக்ஸ் வங்கி கணக்கு முடக்கம்; மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.