நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர். நீர் திறப்பால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.