இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாகவே பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு சென்னையில் இருந்து பயணிக்க 68,000 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 1.20 லட்சம் பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு 2.43 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இதன் மூலம் ரூ.12 கோடி வருவாய் கிடைத்தது. மேலும் கடந்த நவ.9ம் தேதி முதல் 14ம் தேதி வரை மொத்தமாக 30,000த்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கபட்டது. இந்த பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
The post தீபாவளியின் போது இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.