அவரது உத்தரவின்படி, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க கூட்டுறவுத் துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் இன்று (நேற்று) முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவு துறையின் மூலம் பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்துக்குள் வெங்காயம் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை appeared first on Dinakaran.
