நேற்று காலை வன கால்நடை மருத்துவர் முதுமலை, டாக்டர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பைனாகுலர் மூலமாக அந்த குட்டி யானையை கண்காணித்தார். நேற்று காலை 10 மணியிலிருந்து குட்டி யானையின் உடல் பாகம் எதுவும் அசையவில்லை. ஆனால் மூன்று யானைகள் அங்கு இருந்ததால் யாரும் அருகில் சென்று பார்க்க முடியவில்லை. இன்று காலை மூன்று யானைகளும் குட்டியை விட்டு சென்றது. பின்னர் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் அருகே சென்று பார்த்த பொழுது குட்டி யானை (பெண்) இறந்ததை உறுதி செய்தார்கள். பின்னர் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிறவி முரண்பாடுகள் காரணமாக பிறந்த குட்டி இறந்ததாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.
The post நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குட்டி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.