தற்போது தேவை குறைந்ததால் விலை சரிந்து ஒரு கிலோ செவ்வந்தி ரூ.80 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனையாகிறது. விரைவில் தீபாவளி, சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில், செவ்வந்தி பூக்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘இப்பகுதியில் கடந்த ஆண்டு போதிய மழை மழை இல்லாததால் செவ்வந்தி குறைந்த அளவில் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு பருவமழை சரியாக பெய்ததாலும், கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதிய தண்ணீர் இருப்பதாலும், செவ்வந்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
The post சாணார்பட்டி பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் செவ்வந்தி: சாகுபடி அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.