மேலும் சாலை ஓரங்களில் மது அருந்துவதும் மது பாட்டில்களை குடியிருப்பு பகுதி மற்றும் சாலை ஓரங்களில் உடைத்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் திண்டிவனம் நேரு வீதி பகுதியில் சாலை ஓரங்களில் தற்காலிகமாக உணவு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருபவர்கள், ஆயில் மாற்றாமலும், உணவுப் பொருட்களுக்கு மூடி போடாமலும் சுகாதாரமற்ற முறையில் தின்ப்பண்டங்களை விற்பதால் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் அதனை வாங்கி சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
The post திண்டிவனத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்: முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர், வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.