இதனைத் தொடர்ந்து, ஆணையர் ராதாகிருஷ்ணன், திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து 5 மாடுகளை பிடித்து, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாடுகளை சாலைகளில் சுற்ற விடக்கூடாது என்று அறிவுறுத்தியும் சில உரிமையாளர்கள் விட்டுவிடுகின்றனர் என்றும், மாடு முட்டியதால் பாதிக்கப்பட்ட முதியவர் கஸ்தூரி ரங்கன் நலமாக உள்ளார் என்றும் கூறினார். மீண்டும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா உறுதியளித்தார்.
The post சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது: மேயர் பிரியா appeared first on Dinakaran.
