சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டாலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய போதிலும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்தன. எனவே தொடர் திருட்டில் இருந்து தங்கள் இல்லங்களை தாங்களே பாதுகாக்கும் பணியில் ஈடுபட ஊர் பொதுமக்கள் முடிவெடுத்தனர். அதன்படி தலா 25 பேர் கொண்ட குழுக்களாக இரவில் போக்குவரத்து நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாற்போது நிம்மதியாக உணர்வதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
The post திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே தொடர் திருட்டை தடுக்க காவல் பணியில் ஊர் பொதுமக்கள்..!! appeared first on Dinakaran.