தொடந்து, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து சாலைகளும் முழுமையாக போடப்பட்டுள்ளது. மழைக்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் மாவட்டங்கள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக கிட்டத்தட்ட ரூ.2000 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்தார்.
இவற்றில் முதற்கட்டமாக 5000 சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் வகையில் மர அறுவை இயந்திரங்கள், மழைநீர் தேங்கினால் அவற்றை அகற்றும் வகையில் 700க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் சென்னையில் முதல்கட்டமாக 5000 சாலை பணிகள் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.
