₹9 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், அக்.5: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க, மல்லசமுத்திரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 450 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவையை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையி்ல அதிகாரிகள் ஏலத்தை நடத்தனர். இதில், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,540 முதல் ₹7,530 வரையும், பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ₹6,075 முதல் ₹7,435 வரையும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,470 முதல் ₹5,560 வரையும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 450 மூட்டை பருத்தி ₹9 லட்சத்திற்கு ஏலம் போனது. அடுத்த பருத்தி ஏலம் 11ம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹9 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: