ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவி பிரமிளா என்பவர் இந்தி மட்டுமே தெரிந்த சல்மாவிடம் பேசி அவரை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். பிரமிளாவின் நண்பர்கள் அந்த பதிவை மகாராஷ்டிராவில் வைரலாக்கிய நிலையில் இறந்து விட்டார் என கருதப்பட்ட சல்மா உயிருடன் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் நேரில் வந்து அவரை அழைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சல்மாவை தங்களுக்கு கண்டுபிடித்து கொடுத்த மருத்துவ மாணவிக்கு சல்மாவின் கணவர் மற்றும் 2 மகன்கள் நன்றி தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரும் மாணவி பிரமிளாவை பாராட்டி வரும் நிலையில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா நேரில் சென்று சால்வை அணிவித்து புத்தகமும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.
The post புதுக்கோட்டையில் மனநல சிகிச்சையில் குணமடைந்த மராட்டிய பெண்ணை அவரது குடும்பத்துடன் ஒன்றிணைத்த மருத்துவ மாணவிக்கு குவியும் பாராட்டுகள்..!! appeared first on Dinakaran.