மேலும், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் சிப்காட் பகுதிக்கு 24 மணி நேரமும் பைக் மற்றும் சைக்கிள்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர். அப்போது, சிப்காட் நுழைவாயிலையொட்டி பாலாஜி எடை மேடை அருகே உள்ள பாதாள பள்ளத்தில் சுமார் இரண்டு மாதங்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பாதாள பள்ளத்தில் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தொழிலாளிகள் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் பள்ளத்தில் சிக்கி இதுவரை, 6 பேர் சிறு காயமடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இந்த பள்ளத்தை சீர் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, இது சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் வந்து ஆய்வு செய்து, உடனடியாக இந்த சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என சிப்காட் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சிப்காட் நுழைவு வாயில் அருகே உள்ள சர்வீஸ் சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.