பேரணியில், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, கிங்ஸ் அகாடமி கல்லூரி மாணவ – மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, குப்பைகளை கண்மூடி தனமாக சாலையில் போடாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும். நாம் வசிக்கும் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் கெஜலட்சுமி, லதா, வள்ளி, மஞ்சு, துர்காசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா பாராட்டினார்.
The post மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் காந்தி ஜெயந்தி வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.