அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் அக்.2ல் கிராமசபை கூட்டம்

 

அரியலூர், செப்.30: ‘‘அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் அக்டோர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது,’’ என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜாஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநரிடமிருந்து வரப்பெற்ற கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும்.

இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் அக்.2ல் கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: