கல்லணை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடாமல் இருப்பதால் அனைத்து இடங்களிலும் சிறுவர், சிறுமிகள் வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயமின்றி குளித்து மகிழ்ந்தனர். காவிரியில் காணும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தற்போது வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீர்வளத்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியபடி இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தோகூர் போலீசார் செய்திருந்தனர்.
The post விடுமுறை நாளையொட்டி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய கல்லணை appeared first on Dinakaran.