கிருஷ்ணகிரியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியின் வார்டனை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியின் வார்டனை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்து மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், ஆய்வுகளின் அடிப்படையில் குளறுபடிகள் இருந்ததால் விடுதியின் வார்டன் முருகன் என்பவரை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

The post கிருஷ்ணகிரியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியின் வார்டனை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: