நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக மகேஷ் கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்றார். இதுவரை தனக்கு எதிராக எந்த பிரச்னையும் வராமல் மாநகராட்சியை நிர்வாகம் செய்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், அவருக்கு போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேயர் பதவியை நேற்று முன்தினம் மகேஷ் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வழங்கினார்.
