கண்டமனூர் அருகே சீரற்ற சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

வருசநாடு, செப். 24: கண்டமனூர் அருகே உள்ளது கணேசபுரம் செல்லும் சாலை. இச்சாலை கடந்த சில மாதங்களாக பெய்த மழையால், மழைநீர் தேங்கி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் இந்த சாலை வழியாக 500க்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

மேலும், இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த தக்காளி, அவரை, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளை ஆண்டிபட்டி, தேனி, மதுரையில் உள்ள காய்கறி சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர். இந்த குண்டும் குழியுமான சாலையில் தினமும் இவர்கள் செல்லும்போது ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைத்து தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கண்டமனூர் அருகே சீரற்ற சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: