இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆவின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உய்ரநீதிமன்ற உத்தரவுபடி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்தால் ஆதரவளிப்பீர்களா, பாட்டிலில் விற்க வேண்டுமா?, பாலித்தீன் கவரில் விற்கவேண்டுமா என்ற கேள்விகளோடு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் நுகர்வோர் அதிகமுள்ள பகுதிகளில் பாட்டிலில் பால் விற்பனை செய்யும் போது விலை அதிகமாக இருக்கும் என்பதால் பாலித்தீன் உரைகளிலேயே தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
The post கண்ணாடி பாட்டிலில் பால் விற்பதை மக்கள் விரும்பவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் அறிக்கை appeared first on Dinakaran.