இந்நிலையில், சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சமுத்திரத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது நேற்று அதிகாலை 5 மணிக்கு தனபாலுக்கு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. ஏற்கனவே அவர் ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார். மேலும் இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும் இதுபோன்று நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படியும் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டவுடன் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை 10 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். உறவினர்கள் அருகில் இருக்கும்படி கூறப்பட்டது. அவருடன் யாரும் இல்லை என்பதால் தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கூறி அவர் வீட்டிற்கு திரும்பி சென்றார்.
The post கொடநாடு வழக்கில் சிபிசிஐடியிடம் வாக்குமூலம் கொடுத்த ஜெ. கார் டிரைவர் அண்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.
