இதனிடையே நேற்றே பல பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு இன்ப அதிர்ச்சி அளித்தது. இத்திட்டம் துவங்கப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் கோலமிட்ட பெண்கள், கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்ற வாசகத்தையும் எழுதி இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றே பலர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் சொன்னதை செய்துள்ளார். மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு உரிமைத்தொகை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளோம். எனத் தெரிவித்தனர்.
The post மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்… தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்..!! appeared first on Dinakaran.