கந்தசாமிபுரம் விநாயகர் கோயிலில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை

சாத்தான்குளம், செப்.13: சாத்தான்குளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் செல்வசக்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி பருவ மழை வேண்டியும், ஊர் மக்கள் நலம் பெற வேண்டியும், சிறப்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திருவிளக்கு ஏற்றி, பாடல்கள் பாடியபடி மழை பெய்ய வேண்டி மந்திரங்கள் வாசித்தனர். தொடர்ந்து பங்கேற்ற பெண்களுக்கு குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள், பஜனை நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை கந்தசாமிபுரம் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

The post கந்தசாமிபுரம் விநாயகர் கோயிலில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: