அவர் பேசுகையில், ஆவடியில் உள்ள உழவர் சந்தையால் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வசதிகள் மற்றும் நுகர்வோர்கள் பெறும் வசதிகள் குறித்து விளக்கினார். விவசாயிகள் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவற்றை உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேளாண் நல திட்டங்களையும் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் நலத் திட்டங்களையும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
இதில், ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், வேளாண்மை விற்பனை இணை இயக்குனர் விஜயகுமாரி, ஆவடி மண்டல சேர்மன் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், பொன் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post வேளாண் வணிகத் துறை சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்: சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.