சென்னை: மேகதாது அணைக்கு அனுமதி கேட்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பேச்சு ஆபத்தானது என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேகதாது கர்நாடக எல்லைக்குள்தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது என சித்தராமையா கூறியிருந்தார். அரசு நிர்வாகத்தின் அடிப்படை தெரியாமல் சித்தராமையா தெரிவித்த கருத்து கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும். தமிழ்நாடு, கர்நாடகமும் இந்தியாவின் இரு மாநிலங்கள் தானே தவிர இரு தனித்தனி நாடுகள் அல்ல என அவர் கூறியுள்ளார்.
The post மேகதாது அணைக்கு அனுமதி கேட்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ் appeared first on Dinakaran.