எனினும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதுபோன்ற சூழலில் ஜனநாயகத்துக்கு எதிரான குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். அதாவது ஜனநாயக முறையில் இருந்து குடியரசு தலைவர் ஆட்சி முறைக்கு மாறுகிறோம். எனவே இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் மீறும் செயலாகும். இது குறித்து ஒன்றிய அரசு நன்கு அறிந்திருக்கிறது. மாநிலங்களவையில் ஒன்றிய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கு தெரியும். ஆனாலும் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநில தேர்தல்களை ஒத்திவைக்கும் ஒரே குறிக்கோளுடன் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது” என்றார்.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் பிரசாரம் 5 மாநில தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி: பிரசாந்த் பூஷன் விமர்சனம் appeared first on Dinakaran.