ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் இருவர் கைது

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் போலீசார், வேதாளை கடலோரப்பகுதி முழுவதும் நேற்று முன்தினம் இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வேதாளை எம்ஜிஆர் நகர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ எடையுள்ள மெத்தபெடமைன் என்ற போதைப்பொருளை கைப்பற்றினர். ஐஸ் போதைப்பொருள் என்றழைக்கப்படும் இதன் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக மண்டபம் வேதாளை சூடைவலைகுச்சி பகுதியை சேர்ந்த கொசு என்ற சக்திவேல் (23), நாககுமார் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

The post ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: