மல்யுத்தம், கை மல்யுத்தம், பளுதூக்குதல், உடல் அழகு, வளு தூக்குதல், குத்துச்சண்டை, கபடி என 7 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சென்னை மாநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் போட்டியில் கலந்துகொண்டுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாடு காவல் விளையாட்டு வீரர்கள், பின்னர் நடைபெறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கான சோதனை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறும் காவலர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும் என்று மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
The post எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்களுக்கான 2 நாள் மல்யுத்த போட்டி: கமிஷனர் ரத்தோர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.