‘எஸ்பிஜி’ இயக்குநர் திடீர் மரணம்


புதுடெல்லி: ஒன்றிய அரசின் சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (எஸ்பிஜி) இயக்குநராக பணியாற்றி வந்த அருண்குமார் சின்ஹா (61), கடந்த சில வாரங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் ெதாடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சக அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் எஸ்பிஜி பிரிவின் தலைவராக பணியாற்றி வந்த அருண்குமார் சின்ஹா, பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்துள்ளார். சமீபத்தில் தான் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர், கடந்த 1987ம் ஆண்டு பேட்ஜ் கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘எஸ்பிஜி’ இயக்குநர் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: