அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை குறித்துக்கொண்ட மென்பொருள் பொறியாளர்கள் கேளம்பாக்கம் போலீசில் அலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், கேளம்பாக்கம் போலீசார், வண்டலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அந்த 2 நபர்கள்தான் போலீஸ் என்று கூறி வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கலீல் (42), கந்தன்சாவடியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, போலீசார், 2 பேரை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post போலீஸ் எனக்கூறி காதல் ேஜாடியிடம் வழிப்பறி: 2 பேர் கைது appeared first on Dinakaran.