இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் நேரில் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டா வழங்கியதை எதிர்த்த பஞ்சாயத்து தலைவரின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் நடவடிக்கை கலெக்டர் எடுக்க வேண்டும். தகுதி அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்குவதை கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும்.
சமுதாயத்தில் சில பிரிவினரால் தவறான முறையில் நடத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களை, சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3ம் பாலினத்தவருக்காக அரசு பல்வேறு சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தபோதும் கூட அவை முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. மூன்றாம் பாலினத்தவர்கள் கிராம திருவிழாக்களில் கலந்து கொள்வதையும், கோவில்களில் வழிபாடு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.