திண்டுக்கல்லில் பள்ளி ஆண்டு விழா

திண்டுக்கல், ஆக. 15: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 98வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, புனித மரியன்னை கலைமனைகள் அதிபர் மரிவளன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் மரிய லூயிஸ் சேகர் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி மணிகண்ட ராஜா வாழ்த்துரை வழங்கி, பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் நாட்டாமை காஜா மைதீன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தாளாளர் அருள் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அலுவலர் சங்க செயலாளர் கிறிஸ்டி இளையராஜா நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: