இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பன், அவரது மனைவி சுடலி, மகன்கள் மாதவன், சந்துரு ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் இளவரசன் என்ற ஆஷாவுக்கும் மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக நேற்று நீ எவ்வாறு புகார் தெரிவிக்கலாம் என கூறி தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதுடன், கம்பியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post பேட்டை டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.