டெல்லி: வாகனங்களில் உள்ள ஹாரன் மற்றும் சைரன் சத்தங்களை புல்லாங்குழல், தபேலா உள்ளிட்ட இசைக் கருவிகளின் இனிமையான ஒலியாக மாற்ற விரும்புவதாக ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது ஒலி மாசுவில் இருந்து பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்.