சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள பாப்புலர் பிரன்ட் அமைப்பின் கிரீன்வாலி என்ற நிறுவனம் முடக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானூர், வேங்கடா, திரூர், ராங்கோட்டூர் ஆகிய 4 இடங்களில் பாப்புலர் பிரன்ட் அமைப்பினரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனை நடத்தும் விவரம் குறித்து உள்ளூர் போலீசாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை.
The post கேரளாவில் 4 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை appeared first on Dinakaran.